Saturday, March 26, 2011

வந்துட்டேன்..ஆனா வரலை ;)

என் வலைப்பூவில் புதிய பதிவுகள் தேடித் தேடி உங்க எல்லாரோட கண்களும் பூத்துப் போனதைப் பார்த்து எனக்கு மனசே கேட்கலை (?)...ம்ஹும்..அப்படியெல்லாம் சொல்லக்கூடாது... நீங்க தேடினது எனக்குத் தெரியும்...அதான் பதிவு போட ஓடி வந்தேன். (ஹி..ஹி..சமாளிப்பு எப்பூடி..?);)

எங்க வீட்டு பெரியதுரையைப் பற்றி சில பதிவுகள் போட்டிருக்கிறேன்..(இருக்கிற பதிவுகளே சிலதுதான்னு நீங்க சொல்றது எனக்கு கேட்கலை ;)) ...இனிமே சின்னத்துரையைப் பற்றியும் பதிவுகள் இடம்பெறும் இன்ஷா அல்லாஹ்... அதென்ன இவ்வளவு நாள் போட முடியாத பதிவு இனிமேல் மட்டும்? இறைவன் அருளால் என் சின்னத்துரை பூமியில் காலடி எடுத்து வைத்து இன்றோடு இரண்டு வாரங்கள் ஆகிறது(சின்னத்துரைதான்னு ஸ்கேன்ல பார்த்துட்டோம்ல;)). அவனுடைய ஈருலகு நல்வாழ்விற்கும் துஆ செய்யுங்கள்.

ஆகையினால் புன்னகை வலைக்கு தற்காலிக ஓய்வு கொடுக்கப்படுகிறது. ரொம்ப நல்லதுன்னு நீங்க நினைக்கிறதுக்குள்ள இன்னொன்னு சொல்லிடறேன்...என் வலையை மூட்டை கட்டி வைத்தாலும் உங்கள் வலைப்பூக்களுக்கு மட்டுமாவது அப்பப்ப வந்து பின்னூட்டி அட்டன்டன்ஸ் கொடுப்பேன் (ஏதோ சமூகத்துக்கு என்னாலான தொண்டு);)

இன்ஷா அல்லாஹ், கடையை...சாரி..வலையை மீண்டும் திறக்கும்போது மஹியோட தொடர்பதிவோடு தொடர்கிறேன்.

Wednesday, March 2, 2011

அவனா?இவனா?

படிக்கும் பருவத்தில்
பதக்கங்கள் குவித்த போதும்
கைநிறைந்த சம்பளத்தில்-பல
கண்களை விரியச் செய்த போதும்
மனதிற்கேற்ற மங்கை
மனைவியாய் வாய்த்த போதும்
அவளளித்த தேவதையால்
எண்ணிலடங்கா இன்பங்களை
எளிதாய் எட்டிய போதும்
இறைவனை மறந்தான்;
தன்னையே மகிழ்ந்தான்;
பிஞ்சு உடலில் அனல்
வலிப்பாய் வெளியான போது
'கடவுளேஏஏஏஏஏஏஏஏஏ' என்ற
தன் அலறலால்
தன்னை உணர்ந்தான் முதன்முதலாய்.


மக்கா...இத கவிதைன்னெல்லாம் சொல்லி உங்களை நோகடிக்க மாட்டேன்... அப்புறம் மலிக்கா சண்டைக்கு வந்துடுவாங்க... இதையெல்லாம் கவிதைன்னு சொன்னா நாங்கள்லாம் ரூம் போட்டு யோசிச்சு எழுதறமே அது என்னன்னு கேட்டுடுவாங்க... அதுக்காக 'கட்டுரையை ஏன் இப்படி பிச்சு பிச்சு எழுதியிருக்க'ன்னுலாம் கேட்கக்கூடாது.. :(