Tuesday, November 17, 2015

மாணவப்பருவம் கூறும் வாழ்க்கைப்பாடம்

மாணவர்களை மூன்று பிரிவுகளாகப் பிரித்துவிடலாம்.
முதல் வகையினர்:
பரீட்சையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மிகச்சரியான விடையை மட்டும் தெளிவாக, முக்கியமான பாயிண்டுகளை ஹைலைட் செய்து ஆசிரியரை இம்ப்ரஸ் செய்து மார்க் அள்ளிவிடுபவர்கள்.
இரண்டாம் வகையினர்:
கேட்கப்பட்ட வினாவிற்கான பதிலையும் எழுதி, அதைப் பற்றித் தனக்குத் தெரிந்த அதிகப்படியான விஷயங்களைையும் எழுதி இன்னும் அதிக மார்க் பெறுவார்கள்.
மூன்றாம் வகையினர்:
கேட்கப்பட்ட கேள்விக்கும் இவர்கள் எழுதும் பதிலுக்கும் சற்றும் சம்பந்தம் இருக்காது. ஆனால், முதல் இரண்டு வகையினர் அளிக்கும் பதிலைவிட அதிகப் பக்கங்களுக்கு எழுதியிருப்பார்கள். பேப்பர் திருத்தும் ஆசிரியர் மனநிலை பொறுத்து மதிப்பெண் கிடைக்கும். வாசிக்கவில்லையெனில் மார்க். வாசித்தால் அதோகதி தான்.

நீதி:
முதலிரண்டு வகையினர் வாழ்க்கையும் வாழ்க்கைத்துணையினரின் நிலையும் ஓரளவுக்கேனும் சீராக இருக்கும்.
ஆனால் இந்த மூன்றாம் வகையினரின் வாழ்க்கை.. அதுவும் வாழ்க்கைத்துணை பாடு ..... பெரும்பாடு தான். ஆழ்ந்த வாழ்த்துகள். :’(
(நேற்று ஹஸ் கூட பேசிட்டு இருக்கும்போது தோன்றியது.. அவ்வ்)

No comments: