Thursday, June 11, 2015

எங்க வீட்டுக்கதை!

வீடு மாறும் வேலைகள் துவங்கியதில் இண்டர்நெட் கட் பண்ணியாச்சு.... எஃப்பி, வாட்சப், ப்ளாக் என்று வெளி உலகமே மறந்து வீடு மாறிய பிறகு ஐந்து நாட்கள் கழிந்து நெட் கனக்‌ஷன் கிடைத்தது. 

வாட்சப் திறந்தால் ஸ்ட்ரக் ஆகும் அளவிற்கு மெசேஜ் நிரம்பி வழிகிறது. 3 முறை திறந்தும் எந்த மெசேஜும் பார்க்க முடியவில்லை. ஹேங்க் ஆனதால், பொறுமை தொலைந்து ப்ளாக், எஃப்பி ஓபன் செய்தாச்சு. இனி மொக்கைகள் தொடரும். ஹி ஹி..

பல வாரங்கள் தேடி அலைந்து, பல வீடுகள் தேர்ந்தெடுத்து முடிவு செய்து, ஒரு வீட்டிற்கு அட்வான்ஸ் கூட கொடுத்த பின்பு கேன்சல் ஆனது. பல சமயங்களில் இருவரும் சேர்ந்தே வீடு தேடினோம். ஆனால் அந்த நாள் என் கணவர் மட்டும் வீடு பார்க்க சென்றார். மாலை பல வீடுகள் பார்த்து, ஒன்றுமே சரிவராமல், இரவு 12 மணிக்கு இந்த வீட்டைப் பார்த்து ஐந்தே நிமிடங்களில் முடிவு செய்து அட்வான்ஸ் கொடுத்தார் என் கணவர். அட்வான்ஸ் கொடுத்த பின் தான் எனக்கு வாட்சப்பில் வீட்டின் ஃபோட்டோக்கள் அனுப்பி வைத்தார். இரவு ஒரு மணிக்கு அந்த வீட்டில் அது சரியில்லை, இது சரியில்லை என்று சொன்னால் ரணகளம் ஆகிவிடும் என்பதால் வேறு வழியில்லாமல் நல்லாயிருக்கு என்று சொல்லியாச்சு. நான் வைத்த கோரிக்கைகள், பெரிய கிச்சன், கடைகள், பள்ளிக்கூடங்களின் அருகாமை என அனைத்தும் இந்த வீட்டில் இருப்பது உண்மை. எனினும் நான் உடன் சென்றிருந்தால் இந்த வீட்டை முடிவு செய்திருப்பேனா என்பது சந்தேகமே.  

பல வீடுகள் பார்த்து முடிவு செய்தும் அவையெல்லாம் தவறி, இறுதி 5 நிமிடங்களில் இந்த வீடு முடிவானதில் இறைவன் ஏதோ ஒரு பெரும் நன்மை வைத்திருக்கிறான் அல்லது முடிவு செய்துவிட்ட அந்த வீடுகளில் இருந்த ஏதோ ஒரு பெரும் ஆபத்தில் இருந்து பாதுகாத்து விட்டதாகப் பலத்த நம்பிக்கை இப்பொழுது எப்படி என்னுள் ஏற்பட்டது என்று என்னால் இன்னும் நம்பமுடியவில்லை. 

இதே ஏரியாவில் வீடு பார்ப்போம்; வேறு ஏரியாவில் வேண்டாம் என்று தினமும் அழுத பெரியத்துரை, அந்த வீட்டு வாசலில் இருந்த பூனைக்குட்டிகளிடம் தினமும் கதை பேசிய சின்னத்துரை வரை வீடு பிடித்துவிட்டது. 

பாதுகாப்பதிலும் உதவி புரிவதிலும் அவனே சிறந்தவன். அல்ஹம்துலில்லாஹ். 

வீடு மாறிய டென்ஷன்கள் பல இருந்தும் சமாளிக்க முடியாத கவலை என்னவென்றால் மகன், பழைய ஏரியா நண்பர்களை அதிகம் மிஸ் செய்வது. பார்ட்டி, அன்பளிப்புகள் என்று பிரியாவிடை கொடுத்து அனுப்பிவைத்துள்ளனர் அவனது நண்பர்கள் :). இவன் தான் வரைந்த ஓவியங்களைப் பரிசாகக் கொடுத்துவிட்டான்.

புதிய வீட்டிலிருந்து முதல் நாள் இந்த ஏரியாவிற்கான பஸ்ஸில் பள்ளிக்குச் சென்றவன், மதியம் வீட்டிற்கு வந்ததும், தொண்டைக்குழி அடைக்க, ஒரு கதை சொன்னான். கதை முடித்ததும் தான் புரிந்தது. அவன், பழைய பஸ் நண்பர்களை மிஸ் செய்வது. ஸ்ஸப்பா.... அவனுக்கு ஆறுதல் சொல்லியே நேரம் போகிறது.. முடீல...

(அப்ப எங்க பக்கத்து வீட்டு தோழிகளை நான் மிஸ் பண்ணலையான்னு தானே நினைக்கிறீங்க?? பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் அரபிகள்... சோ, அவர்களைப் பார்த்தால் சிரித்துக் கொள்வதோடு சரி... :) )



ஆனாலும், ஒரு கவலை மனசை ஆட்டிப்படைக்குது... ரமழான் வந்தால், ஹரீஸ், பிரியாணி, சமோசா, டம்ப்ளிங் என்று எண்ணற்ற உணவுவகைகள் தினமும் வந்து கொண்டேயிருக்கும். பக்கத்துப் பள்ளிவாசலில் பிரியாணி தினமும் வழங்குவதுண்டு. சில சமயங்களில் அதுவும் வாங்குவதுண்டு. அவற்றை எல்லாம் இந்த ரமழானில் நிச்சயம் மிஸ் பண்ணுவேன். பின்னே... அதை வைத்தே நோன்பு காலத்தில் அதிகம் சமைக்காமல் சமாளித்து வந்தேனே.. ஹ்ம்ம்ம்... :( 

ஆமா.. புது வீடு வந்ததும் பால் தான் காய்ச்சணுமோ? நான் இங்கு அடுப்பு பற்ற வைத்த நேரம், டின்னர் சமயமாதலால், முதலில் சாதம் தான் வைத்தேன்.. தெய்வக்குத்தம் இல்லையே??? :O

4 comments:

Mahi said...

:O
ஹேப்பியா செட்டில் ஆகுங்க பானு..பழையபடி புன்னகை வலை விரிய வாழ்த்துக்கள்!
:O

சென்னை பித்தன் said...

அது சாதம் இல்லை;பிரசாதம்!
புதிய சூழல் விரைவில் பழ்கும்

பானு said...

வருகைக்கும் வரவேற்பிற்கும் நன்றி மகி :)

பானு said...

வாழ்த்திற்கு மிக்க நன்றி ஐயா! :)